மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது
x

செஞ்சி அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி அருகே கடலாடிகுளம் கூட்டுரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா கள்வாசல் கிராமத்தை சேர்ந்த முருகன் மகன் தமிழ்ச்செல்வன்(வயது 22), முனிவந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் மணிவண்ணன்(24) ஆகியோர் என்பதும், இதுவரை 7 மோட்டார் சைக்கிள்களை திடியதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story