ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி


ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 5 July 2023 6:45 PM GMT (Updated: 5 July 2023 6:46 PM GMT)

ராமநாதபுரம் அருகே ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் அருகே ரெயிலில் அடிபட்டு 2 வாலிபர்கள் உயிரிழந்தனர்.

கார் டிரைவர்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு சேது எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த ெரயிலானது உச்சிப்புள்ளி அருகே உள்ள பிரப்பன்வலசை ரெயில்வே கேட்டை கடந்து சென்றபோது ரெயிலில் அடிபட்டு ஒருவர் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் ரெயில்வே போலீசார் அங்கு சென்று இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில் இறந்தவர் உச்சிப்புளி அருகே உள்ள நாரையூரணி கிராமத்தை சேர்ந்த செல்வந்திரன் (வயது 27) என்பதும், ராமேசுவரத்தில் வாடகை கார் டிரைவராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

இதே போல் மண்டபத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்ற சேது எக்ஸ்பிரஸ் ரெயில் உச்சிப்புளி ரெயில்வே கேட்டை கடந்து சென்றபோது வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் அங்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் ரெயிலில் அடிபட்டு இறந்த வாலிபர் உச்சிப்புளி பகுதியை சேர்ந்த அபினேஷ்வரன் (21) என்பது தெரியவந்துள்ளது

காதல் தோல்வியா?

இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ராமேசுவரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போன இந்த 2 வாலிபர்களும் காதல் தோல்வியால் ரெயிலில் விழுந்து தற்கொலை செய்தார்களா? அல்லது விபத்தா, வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.


Next Story