கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:47 PM GMT)

கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்


புதுச்சேரி மாநிலம் பெரியகாலாப்பட்டு பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் கில்பர்ட் மகன் தாமஸ் (வயது 23), லாஸ்பேட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் நடராஜன் மகன் கார்த்திகேயன் என்கிற லூனா (23). இவர்கள் இருவரின் மீதும் கோட்டக்குப்பம் பகுதியில் குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில வாரத்திற்கு முன்பு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில் தாமஸ், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் கோட்டக்குப்பம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பரிந்துரை செய்தார். அதன்பேரில் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.இதையடுத்து தாமஸ், கார்த்திகேயன் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story