கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட    2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்


கஞ்சா விற்பனை

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த ரெட்டணை கிராமம் ராஜீவ் நகரை சேர்ந்தவர்கள் லோகு மகன் ஸ்ரீகாந்த் (வயது 23), வெங்கடேசன் மகன் சஞ்சய் என்கிற ராமலிங்கம் (21). இவர்கள் மீது மயிலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட முப்புளி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக பல்வேறு வழக்குகள் உள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஸ்ரீகாந்த், சஞ்சய் ஆகிய இருவரையும் மயிலம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, இவர்கள் இருவரும் இதுபோன்று பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால் இவர்களுடைய செயல்களை தடுக்கும்பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது

அதன்பேரில் ஸ்ரீகாந்த், சஞ்சய் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு மாவட்ட கலெக்டர் மோகன் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஸ்ரீகாந்த், சஞ்சய் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் இருவருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story