கடையில் விளம்பர பலகை வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி


கடையில் விளம்பர பலகை வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி
x

கடையில் விளம்பர பலகை வைத்தபோது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள்.

வேலூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு டேனிரோட்டை சேர்ந்தவர்கள் கவுசிக் (வயது 25), சலீம் (22). இவர்கள் இருவரும் தனியார் மோட்டார் சைக்கிள் எண்ணெய் நிறுவனத்தின் விளம்பர பலகைகள் பொருத்துவது தொடர்பான பணிகளை ஒப்பந்த முறையில் செய்து வந்தனர்.

கடந்த 22-ந் தேதி கவுசில், சலீம் உள்பட 5 பேர் வேலூரை அடுத்த ஊசூர் குளத்துமேடு பகுதியில் உள்ள கடை ஒன்றில் இரவில், தனியார் நிறுவனத்தின் பழைய விளம்பர பலகையை அகற்றிவிட்டு புதிய விளம்பர பலகை வைபப்தற்காக சென்றனர். கவுசிக் மற்றும் சலீம் ஆகியோர் அந்த கடையின் 3-வது மாடிக்கு சென்று புதிய விளம்பர பலகையை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மற்ற 3 பேரும் பழைய விளம்பர பலகையை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

அப்போது கடையின் அருகே சென்ற மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக புதிதாக மாட்ட முயன்ற விளம்பர பலகை உரசியது. இதில் கவுசிக், சலீம் ஆகியோர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். இதைக்கண்ட சக தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

1 More update

Next Story