வியாபாரிக்கு 20 ஆண்டு ஜெயில்


வியாபாரிக்கு 20 ஆண்டு ஜெயில்
x

வியாபாரிக்கு 20 ஆண்டு ஜெயில்

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் இருளப்பன் (வயது 50). இவர் கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான பொருட்களை கொடுக்கும் புரோக்கராக வேலை பார்த்தார். இவர் கடந்த 6.9.2020-ம் ஆண்டு மனநிலம் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வந்த புகார் அடிப்படையில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து இருளப்பனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இருளப்பனுக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி பூர்ணஜெய ஆனந்த் தீர்ப்பளித்தார். மேலும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.5 லட்சம் தமிழக அரசு நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார்.

1 More update

Related Tags :
Next Story