வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை


வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 31). இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராஜாவை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. நீதிபதி சரண் வழக்கை விசாரித்தார். அரசு தரப்பில் வக்கீல் ஜோதி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து நீதிபதி சரண் நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம் சாட்டப்பட்ட முத்துராஜாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story