திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 துப்புரவு தொழிலாளர்கள் கொலை


திண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 துப்புரவு தொழிலாளர்கள் கொலை
x
தினத்தந்தி 24 Nov 2017 5:17 AM GMT (Updated: 24 Nov 2017 5:17 AM GMT)

திண்டுக்கலில் இன்று ஒரே நாளில் 3 துப்புரவு தொழிலாளர்கள் வெட்டி கொலை செய்யபட்டது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல்


திண்டுக்கல் - சிலுவத்தூர் சாலையில் துப்புரவு பணியாளர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த 5 மர்ம நபர்கள் துப்புரவு தொழிலாளியை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள்திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மற்றொரு துப்புரவு தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதே போல் திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே மற்றொரு துப்புரவு பணியாளரும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 துப்புரவு தொழிலாளர்கள் கொலை செய்யபட்டுள்ளது திண்டுக்கலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர்கள் சோலைகால் நெட்டுத்தெருவை சேர்ந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பாலமுருகன், சரவணன் மற்றும் வீரா ஆகியோர் என தெரியவந்து உள்ளது

Next Story