எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு: சிவகங்கை மாவட்டம் முதலிடம்; ஜூன் 28ல் மறுதேர்வு எழுதலாம்


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு:  சிவகங்கை மாவட்டம் முதலிடம்; ஜூன் 28ல் மறுதேர்வு எழுதலாம்
x
தினத்தந்தி 23 May 2018 4:02 AM GMT (Updated: 23 May 2018 4:02 AM GMT)

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

சென்னை,

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் 16-ந்தேதி தொடங்கியது. தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ-மாணவிகள் எழுதினர்.

இதில் பள்ளி மாணவிகள் 4,81,371 பேர், மாணவர்கள் 4,83,120 பேர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதியுள்ளனர்.

இந்த நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.  இதில், 94.5 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வருடமும் மாணவிகளே மாணவர்களை விட அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.6 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிவகங்கை, ஈரோடு, விருதுநகர் மாவட்டங்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன.  இதில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.  ஈரோடு 2வது இடமும், விருதுநகர் 3வது இடமும் பிடித்துள்ளன.

5,584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.  தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் ஜூன் 28ல் மறுதேர்வு எழுதலாம்.

Next Story