வேலூர்: திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை


வேலூர்: திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 1 April 2019 4:33 AM GMT (Updated: 1 April 2019 4:33 AM GMT)

வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

வேலூர், 

வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடுகிறார். 

இந்த சூழலில், துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான கல்லூரிகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ. 10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.  வருமான வரித்துறை சோதனை நடத்தியதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். 

இந்த நிலையில், வேலூர் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 

Next Story