காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து


காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசின் முடிவுக்கு எதிராக விஜய் சேதுபதி கருத்து
x
தினத்தந்தி 12 Aug 2019 8:20 AM GMT (Updated: 12 Aug 2019 8:20 AM GMT)

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசை விஜய் சேதுபதி சாடியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மத்திய அரசின் முடிவுக்கு திமுக,  காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மக்கள் நீதி மய்யம்  கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசனும் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து இருந்தார். ஆனால், காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசை ரஜினிகாந்த் பாராட்டி பேசினார்.

இந்த நிலையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை கடுமையாக சாடியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற விருது  வழங்கும் விழாவுக்கு சென்ற விஜய் சேதுபதி, அங்குள்ள தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் விவகாரம் குறித்து பேசியதாவது: -

”காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கியது ஜனநாயகத்துக்கு விரோதமானது. காஷ்மீர் விவகாரம் குறித்து பெரியார் அன்றைக்கே கருத்து கூறிவிட்டார்.  அடுத்தவர் வீட்டுப் பிரச்னையில் இன்னொருவர் தலையிடமுடியாது. அடுத்த வீட்டுப் பிரச்சினையில் நாம் அக்கறை செலுத்தலாம், ஆளுமை  செலுத்தக்கூடாது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது மனவருத்தம் தருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Next Story