விஜயகாந்திற்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு


விஜயகாந்திற்கு எதிரான வழக்குகளை திரும்ப பெற்றது தமிழக அரசு
x
தினத்தந்தி 3 Dec 2019 1:03 PM GMT (Updated: 3 Dec 2019 1:03 PM GMT)

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

சென்னை, 

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கடந்த 2012 முதல் 2016  வரை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், தமிழக  அமைச்சர்களையும் அவதூறாக பேசியதாக தமிழக அரசு சார்பில்  5 அவதூறு வழக்குகள் போடப்பட்டன. 

இந்த வழக்குகள் மீதான விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன், விஜயகாந்த் மீதான 2 வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசு தரப்பு தெரிவித்தது. அரசு விளக்கத்தையடுத்து 2013, 2014 ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Next Story