ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு- தமிழக அரசு


ஜி.எஸ்.டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம்  ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிப்பு- தமிழக அரசு
x
தினத்தந்தி 3 July 2020 7:46 AM GMT (Updated: 3 July 2020 7:46 AM GMT)

ஜி எஸ் டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜுன் 30 உடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஜி எஸ் டி வரி தாக்கல் செய்ய கால அவகாசம் ஜுன் 30 உடன் நிறைவடைந்த நிலையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி செலுத்துபவர்கள் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 30-ம் தேதி கணக்குகளை தாக்கல் செய்யும் கால அவகாசம் இந்த ஆண்டு மட்டும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதற்கான முடிவை கடந்த ஜுன் 21 ஆம் தேதி நடைபெற்ற ஜி எஸ் டி கூட்டத்தில் மத்திய அரசு எடுத்திருந்தது. அதன் தொடர்ச்சியாக மத்திய அரசின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்திலும் ஜி எஸ் டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

Next Story