மதுரை, தேனி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு


மதுரை, தேனி, விழுப்புரம் மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 24 July 2020 4:40 AM GMT (Updated: 24 July 2020 4:40 AM GMT)

மதுரை, தேனி, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் புதிய உச்சத்தை தொட்டே உயர்ந்து வருகிறது. இதில் சென்னைக்கு அடுத்தப்படியாக செங்கல்ப்பட்டு, திருவள்ளூர்,மதுரை, தேனி, விழுப்புரம் மாவட்டக்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்ட மாவட்டங்கள் விவரம்:-

* மதுரை மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி கொரோனா தொற்றால் மேலும் 318 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 9000 கடந்ததுள்ளது. மேலும்  2,836 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். 5965 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 183 பேர் உயிரிழந்துள்ளனர்.

* தேனி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி ஒரே நாளில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 464 ஆக உயர்ந்துள்ளது. மேலும்  1,421 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர்.

* விழுப்புரம் மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி புதிதாக 214 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில்  கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,827 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் 5 மருத்துவர்கள், 13 செவிலியர்கள், 9 காவலர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story