தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு
x
தினத்தந்தி 21 Aug 2020 4:21 PM GMT (Updated: 21 Aug 2020 4:21 PM GMT)

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

தேசிய நல்லாசிரியர் விருதுகளுக்கு நாடு முழுவதிலும் இருந்து 47 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், தமிழகத்தை சேர்ந்த இருவரும் இடம் பெற்றுள்ளனர். 

 விழுப்புரம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் திலிப், சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சரஸ்வதி ஆகிய  இருவருக்கும் தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய கல்வி அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


Next Story