சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்


சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 19 Sep 2020 6:20 AM GMT (Updated: 19 Sep 2020 6:20 AM GMT)

சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை,

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம் என தலைமை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறுகையில், 

“  சசிகலா பற்றி நேற்றைய கூட்டத்தில் பேசவில்லை.   ஒற்றுமையாக இருந்து, வரும் தேர்தலை சந்திக்க ஆலோசனை நடைபெற்றது. முதலமைச்சர் வேட்பாளர் குறித்து பேச வேண்டாம் என தலைமை ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. அதிமுக கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது” என்றார்.


Next Story