தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு


தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Oct 2020 1:06 PM GMT (Updated: 20 Oct 2020 1:06 PM GMT)

தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்று 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. இன்று தமிழகம் முழுவதும் 50 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10,741 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 857 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் தினமும் ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வந்த நிலையில் 2வது நாளாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1,91,754 ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று 4,403 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது 36,734 சிகிச்சை பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று 80,371 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 91.12 லட்சம் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story