தமிழ்நாட்டில் மேலும் 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தமிழ்நாட்டில் மேலும் 2,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 July 2021 7:59 PM IST (Updated: 15 July 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் மேலும் 2 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 28 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 29 ஆயிரத்து 950 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரேநாளில் 3 ஆயிரத்து 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 65 ஆயிரத்து 250 ஆக அதிகரித்துள்ளது.

ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழ்நாட்டில் இன்று 49 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது.
1 More update

Next Story