“அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


“அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
x
தினத்தந்தி 3 Sep 2021 5:48 AM GMT (Updated: 3 Sep 2021 5:48 AM GMT)

வடசென்னையில் அயோத்திதாச பண்டிதருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்கியது. இதில் சட்டப்பேரவை விதி எண் 110ன் கீழ் அறிவிப்பு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அதில், அயோத்திதாச பண்டிதரின் 175-வது ஆண்டு விழாவையொட்டி வடசென்னையில் அயோத்தி தாசர் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார்.  அயோத்திதாசர் பண்டிதரின் பெருமையை போற்றும் வகையில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்-அமைச்சர், தமிழ், திராவிடம் என்ற வார்த்தைகளை ஆயுதமாக பயன்படுத்திய மொழிப்புலவர் அயோத்திதாசர் பண்டிதர் என்றும்  தமிழ்நாட்டு அரசியலை தமிழர், திராவிடம் ஆகிய இரண்டு சொற்களின்றி நடத்த முடியாது என்று கூறினார்.

Next Story