பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை


பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 30 Oct 2021 2:50 AM GMT (Updated: 30 Oct 2021 2:50 AM GMT)

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 114-வது ஜெயந்தி மற்றும் 59-வது குருபூஜை விழா அக்.28 -ல் தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை மற்றும் லட்சார்ச்சனையுடன் ஆன்மிக விழா தொடங்கியது. 

இந்தநிலையில்,  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அவரது முழு வெண்கல திருவுருவ சிலைக்கு முதல்-அமைச்சர்  மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக, தெப்பக்குளத்தில் உள்ள மருதுபாண்டியர் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

உடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

Next Story