துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் மரணம்: கமல்ஹாசன் இரங்கல்


துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் மரணம்: கமல்ஹாசன் இரங்கல்
x
தினத்தந்தி 4 Jan 2022 10:19 PM GMT (Updated: 4 Jan 2022 10:19 PM GMT)

துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் மரணம்: கமல்ஹாசன் இரங்கல் ‘தவிக்கும் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்’.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

பசுமலைப்பட்டி துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் இருந்து வெளியேறிய தோட்டா சிறுவன் புகழேந்தியின் இன்னுயிரை பறித்துவிட்டது. பிள்ளையை துள்ளத்துடிக்க பறிகொடுத்த பெற்றோரின் இழப்பு அளவீடற்றது.

அவர்களுக்கு என் ஆறுதல்கள். புகழேந்தியை இழந்து தவிக்கும் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story