அதிக விலைக்கு ஒப்பந்தம்; மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம்


அதிக விலைக்கு ஒப்பந்தம்; மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் தாமதம்
x
தினத்தந்தி 6 Feb 2022 12:06 AM GMT (Updated: 6 Feb 2022 12:06 AM GMT)

அதிக விலைக்கு ஒப்பந்தம் கோருவதனால் மடிக்கணினி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.


சென்னை,


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் 2011-ல் தொடங்கப்பட்டது. அதன்படி 2019ம் ஆண்டு வரை 44 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை.

இதற்கிடையே, கொரோனா பரவல் சூழலில் மாணவர்கள் வீடுகளில் இருந்து கல்வி பயில்வதற்கு மடிக்கணினி பெரிதும் உதவும். எனவே, இலவச மடிக்கணினிகளை விரைவாக வழங்க வேண்டும் என்று அரசு பள்ளி மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறும்போது, அரசின் இலவச மடிக்கணினிகள் குறைந்த விலையில் தயாரித்து வழங்கப்படுபவை. ஆனால், கொரோனா பரவலால் உலக அளவில் மடிக்கணினிகளின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. இதனால் கணினி தயாரிப்பு நிறுவனங்கள், அதிக விலைக்கு ஒப்பந்தம் கோருகின்றன.  இதனால், கொள்முதல் செய்வதில் சிக்கல் நிலவுகிறது.

இதனை தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி இந்த விவகாரம் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.




Next Story