ஈரோடு ஆவின் பால்பண்ணையில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு


ஈரோடு ஆவின் பால்பண்ணையில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு
x
தினத்தந்தி 2 May 2022 4:30 PM GMT (Updated: 2 May 2022 4:30 PM GMT)

ஈரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள பால் குளிரூட்டும் அறை, பால்கோவா, வெண்ணெய், பால் பவுடர் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றை நேரில் பார்வையிட்டார்.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் இருந்து மேற்கொள்ளப்படும் பால் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து ஆவின் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, பால்வளத்துறை ஆணையர் பிரகாஷ், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story