விடுமுறை நாளையொட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்


விடுமுறை நாளையொட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்
x

விடுமுறை நாளையொட்டி 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தஞ்சாவூர்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மோகன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கும்பகோணம் கோட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை), 10-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாளையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அதன்படி திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 150 பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் திருச்சியிலிருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களிலிருந்து திருச்சிக்கும், திருச்சியிலிருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 பஸ்களும் என மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன. விடுமுறைக்கு வந்த பயணிகள் திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வருகிற 10, 11-ந் தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிற தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் www.tnstc.inஎன்ற இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story