தென்காசி மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி உள்ளூர் விடுமுறை


தென்காசி மாவட்டத்திற்கு வரும் 25ம் தேதி  உள்ளூர் விடுமுறை
x

பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி,

பங்குனி உத்திர திருநாள் 25.03.2020 திங்கள்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது .இந்த நிலையில், பங்குனி உத்திர திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,25ம் தேதி அரசு பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் , உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டத்திலும் ஏற்கனவே 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story