2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை


2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகை
x

ராணிப்பேட்டையில் 2,610 பேருக்கு மகளிர் உரிமைத்தொகையை அமைச்சர் காந்தி வழங்கி தொடங்கி வைத்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட தொடக்க விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டு முதற்கட்டமாக வாலாஜா மற்றும் ஆற்காடு வட்டத்திற்குட்பட்ட 2,610 பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகைக்கான வங்கி ஏ.டி.எம். அட்டைகளை வழங்கினார்.

அப்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.48 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 2.29 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதிகளின் அடிப்படையில் தோராயமாக 1½ லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தகுதியிருந்தும் விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்தால் 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியர் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஜி.கே.உலகப்பள்ளி மேலாண்மை இயக்குனர் வினோத் காந்தி, மாவட்ட பொருளாளர் ஏ.வி.சாரதி, ஒன்றியக்குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், கலைகுமார், வடிவேலு, புவனேஸ்வரி சத்தியநாதன், நிர்மலா சவுந்தர், அசோக், அனிதா குப்புசாமி, நகரமன்ற தலைவர்கள் சுஜாதா வினோத், ஹரிணி தில்லை, தேவி பென்ஸ்பாண்டியன், முகமது அமீன், தமிழ்செல்வி அசோகன், லட்சுமிபாரி, பேரூராட்சி தலைவர்கள் லதா நரசிம்மன், நாகராஜன், ரேணுகா தேவி சரவணன், சங்கீதா மகேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், துணை கலெக்டர்கள், தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story