குமரிக்குசரக்கு ரெயிலில் 2,650 டன் ரேஷன் அாிசி வந்தது

குமரிக்குசரக்கு ரெயிலில் 2,650 டன் ரேஷன் அாிசி வந்தது
கன்னியாகுமரி
நாகர்கோவில், பிப்.2-
குமரி மாவட்ட பொது வினியோக திட்டத்துக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். அந்த வகையில் நேற்று முன்தினம் 2 ஆயிரம் டன் அரிசி வந்தது. இந்த நிலையில் நேற்று காலை தெலுங்கானாவில் இருந்து சரக்கு ரெயில் மூலம் 2,650 டன் ரேஷன் அரிசி மூடைகள் நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அரிசி மூடைகள் லாரிகளில் ஏற்றி குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அரிசி மூடைகளை ஏற்றுவதற்காக ரெயில்வே ரோட்டில் ஏராளமான லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story






