விவேகானந்தர் மண்டபத்தை 4 நாட்களில் 29,500 பேர் பார்வையிட்டனர்


விவேகானந்தர் மண்டபத்தை 4 நாட்களில் 29,500 பேர் பார்வையிட்டனர்
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:47 PM GMT)

கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் ‘களை’ கட்டியது. கடந்த 4 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்ைத 29,500 பேர் பார்த்தனர்.

கன்னியாகுமரி


கன்னியாகுமரியில் அய்யப்ப பக்தர்கள் சீசன் 'களை' கட்டியது. கடந்த 4 நாட்களில் விவேகானந்தர் மண்டபத்ைத 29,500 பேர் பார்த்தனர்.

கன்னியாகுமரி

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இவர்கள் முக்கடல் சங்கமத்தில் நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தும், கடற்கரையில் விளையாடியும் மகிழ்வார்கள்.

மேலும் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிடுவார்கள். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகு போக்குவரத்து தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

அய்யப்ப பக்தர்கள் கூட்டம்

தற்போது சபரிமலை சீசன் தொடங்கியதையடுத்து ஏராளமான அய்யப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் சீசன் களை கட்டத்தொடங்கியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமையான நேற்று கன்னியாகுமரிக்கு ஏராளமானோர் வந்தனர். அவர்கள் காலையில் முக்கடல் சங்கமம் பகுதியில் சூரிய உதயமாகும் காட்சியை காண குவிந்தனர்.

கடந்த சில நாட்களாக மேக மூட்டத்தினால் சூரிய உதயம் தெளிவாக தெரியாமல் இருந்தது. ஆனால் நேற்று காலையில் மேக மூட்டம் இன்றி சூரிய உதயம் தெளிவாகத் தெரிந்தது.

தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்தனர். மேலும் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.

29,500 பேர்

தற்போது சீசன் தொடங்கிய கடந்த 4 நாட்களில் 29 ஆயிரத்து 500 பேர் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டுள்ளனர். அதிகபட்சமாக நேற்று 8 ஆயிரத்து 700 பேர் விவேகானந்தர் மண்டபத்துக்கு சென்றனர்.

திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதனால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story