கந்தம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது


கந்தம்பாளையம் அருகே  பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது
x

கந்தம்பாளையம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

நாமக்கல்

கந்தம்பாளையம்:

கந்தம்பாளையம் அருகே கூடச்சேரி மணிமுத்தாற்றின் கரையோர பகுதியில் உள்ள முட்புதரில் பணம் வைத்து சூதாடுவதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது கல்லாங்காட்டு புதூரை சேர்ந்த சக்திவேல் (வயது 40), மேலப்பட்டியை சேர்ந்த வீரன் மகன் நிஷாந்த் (21) மற்றும் அதே ஊரை சேர்ந்த மணி மகன் சிதம்பரம் (25) ஆகியோர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.600-ஐ பறிமுதல் செய்தனர்.

1 More update

Next Story