வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது


வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே வாலிபரை கத்தியால் வெட்டி செல்போன் பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் ராஜபாண்டியன் (வயது 27). இவர் தென்காசியில் இருந்து காஞ்சீபுரத்திற்கு மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை வழியாக புறப்பட்டு சென்றார். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் பஸ் நிறுத்தம் பகுதியில் மழைக்காக அவர் ஒதுங்கி நின்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் அங்கு வந்து ராஜ ராஜபாண்டியனிடம், மழையில் தங்களது செல்போன் நனைந்து விட்டது. எனவே உங்களது செல்போனை கொடுங்கள் ஒருவரிடம் பேசிவிட்டு தருவதாக கூறினர். இதையடுத்து ராஜபாண்டி தனது செல்போனை அவர்களிடம் கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் அவர்கள் அந்த செல்போனை வாங்கிக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றனர். அவர்களை ராஜபாண்டியன் தடுத்து நிறுத்த முயன்றார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள், ராஜபாண்டியனை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ராஜபாண்டியனை கத்தியால் வெட்டிவிட்டு செல்போனை பறித்து சென்றவர்கள் சங்கராபுரம் அருகே மல்லாபுரம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (23), கந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த சஞ்சய் (24) மற்றும் இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த தேவா (19) என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் மேலும் பொதுமக்கள் பலரிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றது தெரிந்தது.

1 More update

Next Story