3 சிறுவர்கள் கைது


3 சிறுவர்கள் கைது
x

கொத்தனார் சாவு வழக்கில் திடீர் திருப்பமாக 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் வசித்து வந்தவர் மாரியப்பன் (வயது 56). இவரது சொந்த ஊர் சேலம் மாவட்டம் மேட்டூர் ஆகும். கொத்தனரான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை வந்து பணியாற்றி வந்தார். இந்த நிலையில் மாரியப்பன் சம்பவத்தன்று இரவு உடலில் ரத்த காயங்களுடன் பெரியார் நகர் கார்னரில் கிடந்தார். அவரை அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் அவர் இறந்தார். அவர் இறந்ததை சந்தேக மரணமாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதில் திடீர் திருப்பமாக சம்பவத்தன்று மாரியப்பனிடம் 15 வயது நிரம்பிய சிறுவர்கள் 3 பேர் பீடி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் கொடுக்க மறுத்தததால் மதுபாட்டில்களால் மாரியப்பனை தொடையில் குத்தியதாகவும், அதில் ரத்தம் அதிகம் வெளியேறியதால் இறந்ததும் தெரியவந்தது. இதையடுத்து எதிர்பாராமல் தாக்கியதில் அவர் இறந்ததாக 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story