பழனியில் 3 நிறம் மாறும் 'ரங்கூன் கிரீப்பர்' பூ..!


பழனியில் 3 நிறம் மாறும் ரங்கூன் கிரீப்பர் பூ..!
x

பழனியில் 3 நிறம் மாறும் 'ரங்கூன் கிரீப்பர்' பூ கொடியில் பூக்கள் பூத்துள்ளது.

பழனி:

பழனி சண்முகபுரத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி கவுரி. இவர் தனது வீட்டில் ரோஜா, மல்லி என பல்வேறு அழகு செடிகள் வளர்த்து வருகிறார். தற்போது இவரது வீட்டில் 'ரங்கூன் கிரீப்பர்' என்ற கொடியில் பூக்கள் பூத்துள்ளது.

இந்த கொடியில் மொட்டுகள் வெள்ளை நிறத்திலும், மலரும்போது ரோஸ் நிறமாக மாறி இறுதியில் சிவப்பு என 3 நிறம் பெறுகிறது. இதை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதுகுறித்து அவர் கூறுகையில் 'ரங்கூன் கிரீப்பர்' செடியை 2 ஆண்டுகளுக்கு முன்பு செடியாக நட்டு வைத்தேன். நட்டதில் இருந்து 9 மாதங்களுக்கு பின் பூக்க தொடங்கியது. 3 மாதத்துக்கு ஒரு முறை பூ பூக்கிறது. மல்லி போன்று வாசனையுடன் பார்ப்பதற்கு அழகுடன் இருப்பதால் பலரும் பார்த்து செல்கின்றனர் என்றார்.


Next Story