திருப்போரூர் அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 பேர் கைது


திருப்போரூர் அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 பேர் கைது
x

திருப்போரூர் அருகே காரில் துப்பாக்கிகளுடன் சுற்றிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

செங்கல்பட்டு

போலீசார் சோதனை

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த இள்ளலூர் பகுதி துரைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தாண்டவமூர்த்தி. இவரது சகோதரர் குமார். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதியில் தனியாக மனைப்பிரிவு பிரித்து அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணிகளுக்காக கொண்டுவந்த 3 டன் இரும்பு கம்பிகள் காணாமல் போனதாக திருப்போரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

கைது

இந்த நிலையில் அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்த கார் ஒன்றை சோதனை செய்தபோது, அதில் 4 துப்பாக்கிகள் மற்றும் அயல்நாட்டு மதுபானங்கள் இருப்பதை திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பறிமுதல் செய்து காரில் வந்த 3 பேரை கைது செய்து திருப்போரூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணயில் அவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் இள்ளலூர் பகுதியை சேர்ந்த வசந்தன்(வயது 33), கிழக்கு கடற்கரை சாலை முட்டுக்காடு பகுதியை சேர்ந்த பிரித்விராஜ் (42), பெங்களூருவை சேர்ந்த கார்த்திகேயன் (41) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கார், மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

போலீசார் விசாரணை

இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மேலும் சிலரிடம் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் திருப்போரூர் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று துப்பாக்கி மற்றும் மதுபானங்கள் கொண்டு வந்த நபர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணமாக பதில் கூறியதாக தெரிகிறது.

காட்டில் விலங்குகளை வேட்டையாட துப்பாக்கியை கொண்டுவந்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிகளுக்கு லைசன்சு இருக்கிறதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story