ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவர்கள் கைது


ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவர்கள் கைது
x

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர வாலிபர் கொலை வழக்கில் மேலும் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா அருகே உள்ளது இருங்குளம் காப்பு காடு. இது தமிழக-ஆந்திர எல்லையையொட்டிய தமிழகத்தை சேர்ந்த ஆள்நடமாட்டம் இல்லாத வனபகுதி ஆகும். இந்த காப்பு காட்டில் ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை அருகே உள்ள நாகராஜபுரத்தை சேர்ந்த தருண் குமார் (வயது 20) என்பவர் கடந்த மாதம் 4-ந் தேதி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தருண்குமாரை குடிபோதையில் நண்பர்கள் சிலர் வெட்டி கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்தின் செல்போன் சிக்னல்களை வைத்து கொலையாளிகள் 9 பேரை போலீசார் தேடிவந்தனர். இந்த நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மனேஷ் (22), மாநெல்லூரைச் சேர்ந்த குள்ளா என்கிற கவுதம் (24) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட 3 பேரை ஏற்கனவே பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், தற்போது 3 சிறுவர்களை பாதிரிவேடு போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story