குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்


குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபர் மீது தாக்குதல்
x

நாமகிரிப்பேட்டை அருகே குழந்தையுடன் கள்ளக்காதலியை அழைத்து சென்ற வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

கள்ளக்காதல்

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள மூலப்பள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் மணிகண்டன் (வயது 28). லாரி டிரைவர். இவரது மனைவி புவனேஸ்வரி (23). நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஆர்.பி. காட்டூரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (29). இவருக்கும், புவனேஸ்வரிக்கும் வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்தநிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தனது குழந்தையுடன் புவனேஸ்வரி சவுந்தரராஜன் உடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த மணிகண்டன், அவரது உறவினர்களான கொல்லிமலை பொரக்கரநாட்டைச் சேர்ந்த சதாசிவம் (20), பெரியகவுண்டாபுரத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகியோருடன் சென்று சவுந்தரராஜனிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கி உள்ளனர்.

3 பேர் கைது

இதில் காயமடைந்த சவுந்தரராஜன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து அவர் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவர் மணிகண்டன் மற்றும் ராஜீவ் காந்தி, சதாசிவம் ஆகிய 3 பேரை கைது செய்து ராசிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு கோர்ட்டு உத்தரவுப்படி அவர்கள் 3 பேரையும் ராசிபுரம் கிளை சிறைச்சாலையில் அடைத்தனர்.


Next Story