கஞ்சா விற்ற கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது


கஞ்சா விற்ற கணவன், மனைவி உள்பட 3 பேர் கைது
x

ராசிபுரத்தில் கஞ்சா விற்ற கணவன், மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

கஞ்சா விற்பனை

ராசிபுரம் டவுன் நாமக்கல் சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஸ் (வயது 34). ரிக் வண்டி டிரைவர். இவருக்கும், மும்பையைச் சேர்ந்த அன்னலட்சுமிக்கும் (33) 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அன்னலட்சுமி எல்.ஐ.சி. அலுவலகம் அருகில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் அழகு நிலையம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் அழகு நிலையம் நடத்துவதாக கூறிக்கொண்டு கஞ்சா விற்பதாக ராசிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை இட்டனர். அப்போது அழகு நிலையத்தில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

3 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார் அன்னலட்சுமி மற்றும் அவரது கணவர் சதீஸ், அவர்களின் கூட்டாளியான நாகரத்தினம் (36) ஆகியோர் 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட மூவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story