வியாபாரியை அடித்துக்கொன்ற 3 பேர் கைது


திருத்துறைப்பூண்டி அருகே வியாபாரியை அடித்துக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே வியாபாரியை அடித்துக்கொன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மீன் வியாபாரி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதனூர் மணல்மேட்டு தெருவை சேர்ந்த ஜோசப் (வயது40). மீன் வியாபாரி. இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே அதே கிராமத்தை சேர்ந்த தனியார் நிதி நிறுவன ஊழியர் பாபு என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரே சக்திவேல் (24) என்பவர் தனது தாயாரை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்துள்ளார்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களும் மோதி கொண்டதால் சக்திவேலின் தாயார் கீழே விழுந்து காயம் அடைந்துள்ளார். இதனால் சக்திவேலுக்கும், பாபுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அடித்துக்கொலை

சத்தம் கேட்டு அங்கு வந்த ஜோசப், பாபுக்கு சாதகமாக பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சக்திவேலுக்கும், ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் சமாதானம் செய்துள்ளனர். இந்த நிலையில் சக்திவேல் தனது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ்(28), சங்கரய்யா(20) ஆகிய 3 பேரும் அன்று இரவு ஜோசப் வீட்டுக்கு சென்று அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த ஜோசப்பை அக்கம் பக்த்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியல் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜோசப் பரிதாபமாக உயிரிழந்தார்.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திவேல், பாக்கியராஜ், சங்கரய்யா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை தேடி வருகின்றனர்.


Next Story