பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது


பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2023 6:45 PM GMT (Updated: 17 Oct 2023 6:46 PM GMT)

பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை

சிவகங்கையை அடுத்த வந்தவாசி அன்பு நகரை சேர்ந்தவர் மாரிமுத்து(வயது 50). இவருடைய கணவர் வெளியூரில் வேலை பார்க்கிறார். சம்பவத்தன்று பள்ளியில் இருந்து தன்னுடைய பேரனை அழைத்து வர மாரிமுத்து சென்றார். வள்ளனை விலக்கு ரோடு அருகே அவர் நின்றபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென மாரிமுத்து அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின்பேரில் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதி லிங்கபோஸ், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணகுமார், ராமச்சந்திரன் மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில் பெண்ணிடம் நகை திருடியது மதுரை ஐராவதநல்லூர் பகுதியை சேர்ந்த கதிரவன்(34), இளையான்குடி அடுத்த உத்தமனூர் கிராமத்தை சேர்ந்த பூவலிங்கம் (34), தமிழ்செல்வன் (38) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story