கள் விற்ற 3 பேர் சிக்கினர்

நெகமம் அருகே கள் விற்ற 3 பேர் சிக்கினர்.
நெகமத்தை அடுத்த ஜக்கார்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி(வயது 53). இவர் அங்குள்ள தனது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் கள் இறக்கி விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கள் இறக்கி விற்பனை செய்தது உறுதியானது. இதையடுத்து பொன்னுசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 10 லிட்டர் களை பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று வெள்ளாளபாளையத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததாக காளிமுத்து(40), ஈஸ்வரமூர்த்தி(59) ஆகியோரை போலீசார் கைது செய்தனர் அவர்களிடம் இருந்து 54 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





