ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர்; மகன் சாவு


ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர்; மகன் சாவு
x

ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்த நிலையில் மகன் உயிரிழந்தார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

விஷம் குடித்தனர்

திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது 70). இவரது மனைவி சிவகாமி(60). இவர்களுக்கு செந்தில், தினேஷ்(36) என 2 மகன்கள் இருந்தனர். இதில் செந்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

மேலும் தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தபோது, அவர் குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகனுடன் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் விஷம் குடித்தார்.

சாவு

இந்நிலையில் நேற்று அதிகாலை அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள் மோகன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவர் உள்பட 3 பேரும் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story