நிலத்தகராறில் வீடு புகுந்து தம்பதி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது


நிலத்தகராறில் வீடு புகுந்து தம்பதி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Jun 2023 6:45 PM GMT (Updated: 10 Jun 2023 6:45 PM GMT)

முறப்பநாடு அருகே நிலத்தகராறில் வீடு புகுந்து தம்பதி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

ஸ்ரீவைகுண்டம்:

முறப்பநாடு அருகே நிலத்தகராறில் வீடு புகுந்து தம்பதி உள்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நிலத்தகராறு

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள பாறைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 53), கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது உறவினர் பரமசிவன் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பரமசிவனின் மகன் சிவா (எ) சிவசிதம்பரம் (21) மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பொன் இசக்கி மகன் ராமர் (எ) ராமசாமி (20), வல்லநாட்டைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் துரைபாண்டி (24) ஆகியோர் கணேசன் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர்.

அரிவாள் வெட்டு

அப்போது வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி கணேசனை அரிவாளால் வெடட்டினர். மேலும் இதனை தடுக்க முயன்ற அவரது மனைவி வள்ளியம்மாள் (51), மகன் முத்துகிருஷ்ணன் (23) ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அசோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிகிச்சை பெற்று வரும் வள்ளியம்மாள் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

3 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் முறப்பநாடு போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிவசிதம்பரம், ராமசாமி, துரைபாண்டி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story