3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்


3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
x

மாவட்டத்தில் 3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சிவகங்கை

சிவகங்கை ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சண்முகவேல், தாஸ் மோகன் மற்றும் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிலம்பரசன் ஆகிய 3 பேர் மீதும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து அவர்கள் 3 பேரும் பணி இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். அதாவது 2 போலீஸ்காரர்கள் மது குடித்ததாக சர்ச்சையில் சிக்கியதாகவும், மற்றொருவர் சூதாடிய வழக்கில் தொடர்புடையதாகவும் எழுந்த புகாரையடுத்து அவர்கள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டதாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தெரிவித்தார்.


Next Story