3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்

மாவட்டத்தில் 3 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சண்முகவேல், தாஸ் மோகன் மற்றும் தேவகோட்டை நகர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் சிலம்பரசன் ஆகிய 3 பேர் மீதும் ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரையடுத்து அவர்கள் 3 பேரும் பணி இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்யப்பட்டனர். அதாவது 2 போலீஸ்காரர்கள் மது குடித்ததாக சர்ச்சையில் சிக்கியதாகவும், மற்றொருவர் சூதாடிய வழக்கில் தொடர்புடையதாகவும் எழுந்த புகாரையடுத்து அவர்கள் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டதாக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





