மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன
காரைக்குடி,
புதுவயல் அரசு ஆஸ்பத்திரி அருகே சாக்கோட்டை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை போலீசார் மறித்தனர். அப்போது லாரியை நிறுத்திவிட்டு டிரைவர்கள் இருவரும் கீழே இறங்கி தப்பி ஓடி விட்டனர். லாரியில் சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மணல் கடத்திய 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர். அதேபோல் நாகநாதபுரம் பகுதியில் இளையான்குடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பாஸ்கரன்(வயது 28) என்பவரை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





