மதுபாட்டில் விற்ற 3 வாலிபர்கள் கைது


மதுபாட்டில் விற்ற 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 2 Sept 2023 12:15 AM IST (Updated: 2 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம், திருக்கோவிலூர் பகுதியில் மதுபாட்டில் விற்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள மேலூர் டாஸ்மாக் கடை அருகில் சிலர் மதுபாட்டில்களை வாங்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சின்னசேலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் மேலூர் டாஸ்மாக் கடை பகுதியை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அங்கே மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த காட்டனந்தல் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நாராயணன் மகன் தடிக்காரன்(வயது 30), சின்னசேலத்தை அடுத்த வாணவரெட்டி கிராமம், வடக்கு தெரு அய்யாசாமி மகன் ஆறுமுகம்(28) ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார் திருக்கோவிலூர் அருகே உள்ள பிள்ளையார்பாளையம் கிராமத்தில் நடத்திய சோதனையில் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மாரியம்மன் கோவில் தெரு முருகன் மகன் தனசேகர்(30) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story