காவிரி விவசாய சங்கத்தினர் 30 பேர் கைது


காவிரி விவசாய சங்கத்தினர் 30 பேர் கைது
x

பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட காவிரி விவசாய சங்கத்தினர் 30 பேர் கைது செய்யப்பட்டது.

திருவாரூர்

சென்னை மெரினா உழைப்பாளர் சிலை அருகில் கர்நாடகாவின் பந்த் போராட்டத்தை தடுத்து நிறுத்த மத்திய- மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், பொதுச்செயலாளர் வி.கே.வி. துரைசாமி ஆகியோர் தேசிய கொடி ஏந்தி நேற்று காலை 10 மணிக்கு தர்ணாவில் ஈடுபட்டனர். தர்ணாவில் ஈடுபட்ட பி.ஆர். பாண்டியன் மற்றும் நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இந்தநிலையில் பி.ஆர். பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் மன்னார்குடி ருக்மணி பாளையம் சந்திப்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட திருவாரூர் மாவட்ட தலைவர் சுப்பையன் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட 30 பேரை மன்னார்குடி போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story