டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கு 3.16 லட்சம் பேர் விண்ணப்பம்
x

கோப்புப்படம்

குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 92 பணியிடங்களுக்கான (துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர், உதவி இயக்குநர்(ஊரக வளர்ச்சித்துறை), டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான முதல்நிலை எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.

இப்பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க நேற்று கடைசி நாள் என்றும் பின்னர் அச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கு 3,16,678 பேர் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. மேலும் ஆகஸ்ட் 27 முதல் 29ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் அக்டோபர் 30ம் தேதி முதல்நிலைத் தேர்வு நடைபெறும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.


Next Story