பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன


பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன
x

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் 320 மனுக்கள் பெறப்பட்டன கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாற்றுதல், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 305 மனுக்கள் பெறப்பட்டன. முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 15 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப்பி உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுய தொழில் செய்து வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தில் ஒருவருக்கு ரூ.25 ஆயிரத்துக்கானகாசோலை, இயற்கை மரணம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு ஈமச்சடங்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் வாரிசு 5 பேருக்கு தலா ரூ.17 ஆயிரத்துக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனிஸ்வரன், தனித்துணை ஆட்சியர் சமூகபாதுகாப்பு திட்டம் ராஜலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கவியரசு, உதவி ஆணையர்(கலால்) ராஜவேல், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story