புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று


புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று
x

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 36 பேருக்கு கொரோனா தொற்று

கடலூர்

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 74 ஆயிரத்து 819 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 36 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இவர்களில் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 15 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 17 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது மட்டுமின்றி விழுப்புரம், திருவாரூர், புதுச்சேரியில் இருந்து கடலூர் வந்த 4 பேருக்கும் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வரை 73 ஆயிரத்து 709 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 21 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 225 பேர் கடலூர் மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளிலும், 5 பேர் வெளி மாவட்ட ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை 895 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story