ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை


ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே 6-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம்

தற்கொலை

ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் வினய் (வயது 20). இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி அருகே உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் வினய் கடந்த ஒரு ஆண்டாக கல்லுரிக்கு செல்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

போலீசார் விசாரணை

நேற்று தான் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பில் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வினய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வினய் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story