சூதாடிய 4 பேர் கைது

சாணார்பட்டி அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாணார்பட்டி அருகேயுள்ள மேட்டுக்கடையில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தனியார் குடோனில் பணம் வைத்து சூதாடிய அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த பால்பாண்டி (வயது 35), பாலமுருகன் (36), கன்னியாபுரத்தை சேர்ந்த பெரியசாமி (60), மஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்த ஆறுமுகம் (60) ஆகியோரை போலீசார் பிடித்தனர். அவர்களிடமிருந்து ரூ.7 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





